« உரைமொழி - சென்னை கலைவிழா - பொன்ஸ் | HomePage | காலச்சக்கரம் »
March 23, 2007
முகவுரை
தமிழின் முதலாவது வலைப்பதிவு இணைய மாத இதழாக வலைமொழி இதோ மலர்கிறது. வலைப்பதிவு ஊடகத்தின் நெகிழ்வுத் தன்மையை உள்வாங்கிக் கொண்டு இணைய இதழின் வடிவத்தில் இது உருவாக்கப் பட்டுள்ளது. எளிமையான கருத்துப் பரிமாற்றம், நிரந்தர தகவல் சேமிப்பு போன்றவை இத்தகு வடிவின் பலங்கள் என கருதுகிறோம். யூனித்தமிழில் பல இதழ்கள் இப்போது காணக்கிடைக்கின்ற போதிலும் இது ஒரு சின்னஞ்சிறு இதழாக சிற்றேடாக மாறுபட்டு நிற்கிறது.
இனி முதலாவது இதழ்பற்றி....
இதழ் மிகச்சிறியதாக குறைவான படைப்புகளுடன் வெளி வருகிறது. எனினும் மாறுபட்ட படைப்புகள் உள்ளன.
* மூன்று கவிதைகள் - நவீன் பிரகாஷ், விஷி, செந்தில்
* இரண்டு சிறுகதைகள் - தமிழ்நதி, SP.VR.சுப்பையா
* காலச்சக்கரம்
* இரண்டு செய்திக் கட்டுரைகள் - பொன்ஸ், வெற்றிவளவன்
* செவ்வி - நீங்கள் அறிந்த கவிஞரின் அறியாத தகவல்கள்.
வாசித்து விமர்சனங்களை தாருங்கள். இதன் வடிவம் உள்ளீடு பற்றிய நல்ல ஆலோசனைகளையும் உங்களிடம் எதிர்நோக்கு கின்றோம்.
தொடரும் ஏப்ரல் இதழுக்கு படைப்புக்களையும் வரவேற்கிறோம். உங்கள் ஆக்கங்களை valaimozhi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
வரும் இதழில் சேவைச் செய்திகள் பிற தகவல்களை வரிவிளம்பரமாக வெளியிடப் படும். விளம்பர தகவல்களையும் அனுப்புங்கள்.
இனி இதழில் மூழ்கி அதன் வாசம் நுகர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
08:00 Posted in முகவுரை | Permalink | Comments (2) | Trackbacks (0) | Email this
Trackbacks
The URL to Trackback this post is: http://valaimozhi.blogspirit.com/trackback/1228478
Comments
வாழ்த்துக்கள் !!!
Posted by: செந்தழல் ரவி | March 23, 2007
நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள்
Posted by: பாலமுரளி | April 22, 2007