October 10, 2007

கவிமொழி - விக்கிரமாதித்யன் கவிதைகள்

கவிமொழி - விக்கிரமாதித்யன் கவிதைகள்.

17:45 Posted in கவிதை | Permalink | Comments (0) | Trackbacks (0) | Email this

கவிமொழி -

கவிமொழிகள் -

17:45 Posted in கவிதை | Permalink | Comments (0) | Trackbacks (0) | Email this

March 20, 2007

கவிமொழிகள் - நவீன்பிரகாஷ், விஷி, செந்தில்






medium_1.jpg
முத்தக் காட்டேரி!

நீ....

நீ அழகானவள்
சிணுங்கும்போது
மிக அழகாக இருக்கிறாய்

நீ திட்டும்போது கூட
எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி
திட்டுவது எனக்கு
பிடிக்கிறது தெரியுமா ?

என் கோபத்தை
அழகாக
உறிஞ்சி எடுக்கும்
முத்தக்காடேரி நீ !

நீ திட்டும்போது கூட
எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி
திட்டுவது எனக்கு
பிடிக்கிறது தெரியுமா ?

நவீன் ப்ரகாஷ்

*


மரம்-ரணம்-மணம்!

நம் அன்பு உலகில் ஒரு 'மரம்'
வீழ்ந்தால்?
'மரணம்'
மரணம் ஒரு 'ரணம்'.
நெஞ்சைப் பிளந்து கசக்கிப்
பிழிந்து உருக்கித்
திருகுவதால் ரணம்
மரணம் என்றென்றும் 'ரணம்'.

நம் அன்பு உலகில் ஒரு 'மரம்'
வீழ்ந்தால்?
'மரணம்'
மரணம் ஒரு 'மணம்'
எவருக்கும் தொல்லையின்றி
உடனடி இறையடி சரணம்
அடைவதால் மணம்
மரணம் என்றென்றும் 'மணம்'.

விஷி

*
medium_2.jpg
medium_3.jpg


தேவதை!

ஒரு பங்குனியில் அடர்கானகம்
தாண்டிக்கொண்டிருந்த போது
வழி மறித்த தேவதை
வரம் தருகிறேன் என்றாள்

மறுத்து நடந்தவனின்
கண்களில் பின்பொரு நாள்
கோவில் வாசல் பிச்சைக்காரியின்
முகத்தில் தெரிந்தாள் தேவதை

செந்தில்

*

14:25 Posted in கவிதை | Permalink | Comments (4) | Trackbacks (0) | Email this